கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே தென்கரை, உடுப்பி ரெஸ்டாரன்ட் பகுதியில் இன்று காலை ஆம்னி பஸ் ஒன்று இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது மோதியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்துக்குப் பிறகு பஸ் வள்ளி ஆற்றில் தொங்கிய நிலையில் காணப்பட்டது. மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி. சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். தக்கலை போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














