குளச்சல் போலீஸ் நிலையம் அருகே ராஜேஷ் என்பவரின் பழக்கடை மற்றும் பேக்கரியில் திருட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது. காலையில் கடையைத் திறந்து பார்த்தபோது, கல்லாப் பெட்டியில் இருந்த ரொக்கப் பணம் மற்றும் கடையில் இருந்த ஆப்பிள், வாழைப்பழங்கள் உள்ளிட்ட பழங்கள் மாயமாகியிருந்தன. இது குறித்து குளச்சல் போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதன் விளைவாக, லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (29) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
