குளச்சல் பகுதியில் கடந்த மாதம் 2 ஆம் தேதி பள்ளிக்குச் செல்லாமல் சுற்றித்திரிந்த 9 வயது சிறுவனை ‘நிமிர்’ குழுவினர் பிடித்து விசாரித்தபோது, அவன் நாகர்கோவிலைச் சேர்ந்தவன் என தெரியவந்தது. சிறுவன் குளச்சல் உடையார்விளையில் உள்ள தனியார் சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டான். அங்கிருந்த அரசு நடுநிலைப்பள்ளி மாணவன், நேற்று முன்தினம் விடுதியின் கழிவறை காம்பவுண்ட் சுவரில் ஏறி குதித்து தப்பி ஓடிவிட்டான். இது குறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.














