குளச்சல்: போர்வெல் லாரி மோதி தந்தை, மகன். மகள் படுகாயம்

0
125

குளச்சல் காமராஜர் சாலையைச் சேர்ந்த தாஸ் (45) தனது மகள் சஞ்சனா (15) மற்றும் மகன் அஸ்வின் சஞ்சய் (12) ஆகியோருடன் ஸ்கூட்டியில் நேற்று சென்று கொண்டிருந்தபோது, ஓலக்கோடு அருகே போர்வெல் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஸ்கூட்டி மீது மோதியது. இதில் மூவரும் படுகாயம் அடைந்து குளச்சல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் துரைசாமியை கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here