நெய்யூர் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவ போதகர் விஜயன் (49) குளச்சல் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், பெத்தேல்புரம் பகுதியைச் சேர்ந்த டேவிட் ஸ்டான்லி (49) என்பவர் ஆலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து கொலை மிரட்டல் விடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, போலீசார் டேவிட் ஸ்டான்லி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.














