குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா, குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பதட்டமான வாக்குச்சாவடிகளை நேற்று 2வது நாளாக நேரில் சென்று ஆய்வு செய்தார். குளச்சல் தொகுதிக்கு உட்பட்ட மணலிக்கரை புனித ஜோசப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார். வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் தயார் நிலையில் வைத்திருக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட அவர், தேர்தல் கட்டுப்பாட்டு அறைகளையும் ஆய்வு செய்தார்.














