குளச்சல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அம்மாண்டிவிளை அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கடியப்பட்டிணம் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தடையின்றி வாக்குச்சாவடிக்குள் சென்று வரவும், மின் வசதிகள், கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்ய அவர் அறிவுறுத்தினார்.














