குளச்சல்: மனைவியை தாக்கிய கணவன் உட்பட 4 பேர் மீது வழக்கு

0
190

குறும்பனை, சகாய மாதா தெருவைச் சேர்ந்தவர் ஷாஜி. இவரது மனைவி கஜினி பிரியா (37). இவர் இரண்டாவது ஷாஜியை திருமணம் செய்து உள்ளார். திருமணத்தை பதிவுசெய்வது தொடர்பாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. நேற்று ஷாஜி தனது உறவினர்களான டெய்சி (35), கீதா (35), மேரி (54)  ஆகியோருடன் சேர்ந்து மனைவி கஜினி பிரியாவை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவர் குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். குளச்சல் போலீசார் மனைவியை தாக்கிய ஷாஜி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here