குளச்சல், லியோன் நகரைச் சேர்ந்த ஷகில் மோன் (18) என்ற இளைஞர், நேற்று தனது தாயுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தந்தை இறந்த நிலையில், தாயுடன் வசித்து வந்த ஷகில், போதையில் தாயுடன் வாக்குவாதம் செய்துள்ளார். தாய் கோபத்தில் வெளியே சென்ற நிலையில், திரும்பி வந்து பார்த்தபோது மகன் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார். குளச்சல் போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














