கழுவன்திட்டை பகுதியைச் சேர்ந்த சுனில்குமார் (44) என்ற கூலித் தொழிலாளி, கடந்த 11 மாதங்களுக்கு முன் இறந்த தனது மனைவியைப் பிரிந்த துயரம் தாங்காமல், வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து, குழித்துறை அரசு மருத்துவமனையில் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது தந்தை தாசன் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.