குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றித் திரியும் நாய்களால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளான நிலையில், நகராட்சி சார்பில் நேற்று வியாழக்கிழமை நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. குழித்துறை கால்நடை மருத்துவமனை டாக்டர் எட்வின் தாமஸ் மற்றும் சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் 36 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தினர்.