குழித்துறை – மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் விளக்குகள் எரியாமல் இருட்டாக காணப்படுவதாக பொதுமக்கள் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து, குழித்துறை நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ. 9.50 லட்சம் மதிப்பில் 120 மின் விளக்குகள் பொருத்தும் பணி நேற்று தொடங்கியது. நகராட்சி தலைவர் பொன் ஆசைத்தம்பி இந்தப் பணியை துவக்கி வைத்தார். இந்தப் பணிகள் 10 நாட்களில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.














