குமரி மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா அலுவலகத்தை முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நேற்று திறந்து வைத்தார். பத்மநாபபுரம், கிள்ளியூர், விளவங்கோடு ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெறுவதே இதன் நோக்கம் என்றும், வரும் தேர்தலில் பாஜக கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்தார். தேசிய ஜனநாயக கூட்டணியில் தமாகாவை சேர்க்க மத்திய அரசு அமைப்புகளை பயன்படுத்தி மிரட்டுவதாக எதிர்கட்சிகள் கூறுவது உண்மை அல்ல என்றும் அவர் கூறினார்.














