கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மீனபரணி நாளில் நடைபெறும் பச்சிளம் குழந்தைகளின் தூக்க நேர்ச்சை நேற்று அதிகாலை தொடங்கி இன்று (மார்ச் 23) காலை நிறைவடைந்தது. ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்த 1124 குழந்தைகளுடன், அம்மன் 26 என மொத்தம் 1150 குழந்தைகள் நேர்ச்சையில் பங்கேற்றனர். தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இரவு பகலாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.














