கொல்லங்கோடு: பெண் கொலை முயற்சி தாய் மகன் மீது வழக்கு

0
96

கொல்லங்கோடு அருகே சூரியகோடு பகுதியைச் சேர்ந்த சுனிதா (37) என்பவர், தனது வீட்டருகே வசிக்கும் வனஜா தனது வீட்டு குப்பைகளை சுனிதா வீட்டு முன்பாக கொட்டுவதாக புகார் அளித்தார். இது குறித்து கேட்டபோது, வனஜா மற்றும் அவரது மகன் அபினேஷ் (23) ஆகியோர் சுனிதாவை தாக்கியுள்ளனர். காயமடைந்த சுனிதா குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொல்லங்கோடு போலீசார் தாய்-மகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here