கொல்லங்கோடு: வீட்டு முன்பு காயத்துடன் பெண் சடலம்

0
24

சூழால் பகுதியைச் சேர்ந்த முத்தம்மா (53) என்பவர் வீட்டில் முகத்தில் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டார். அவரது மகன் ஸ்டான்லி நேற்று வந்து பார்த்தபோது இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. உடனடியாக குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, உடலை குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here