நேற்று இரவு இனயம் புத்தன்துறை பகுதியை சேர்ந்த மீன்பிடி தொழிலாளி சகாய ஜேம்ஸ் (38), தனது மகன் ஜான் பெலிக்ஸ் (8) மற்றும் உறவினர் ஒருவருடன் பொழியூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது கொல்லங்கோடு பகுதியில் மற்றொரு பைக் சகாய ஜேம்ஸ் பைக்கில் மோதியதில், மூவரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் பாறசாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
