கிராத்தூர் பகுதியைச் சேர்ந்த ரெஜி (20), ரெஜின் (23), பெரின் (22) ஆகிய மூன்று இளைஞர்கள் நேற்று மேற்கு கடற்கரை சாலை வழியாக இரு சக்கர வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிரே வந்த ஒரு பெண் ஓட்டிச் சென்ற சொகுசு கார் அவர்களின் இரு சக்கர வாகனங்களில் மோதியது. இந்த விபத்தில் மூன்று இளைஞர்களும் படுகாயமடைந்து குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கொல்லங்கோடு போலீசார், பெண் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














