கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, முள்ளங்கினாவிளை ஊராட்சிக்குட்பட்ட முள்ளங்கினாவிளை புனித அந்தோணியார் கலையரங்கத்தில் நேற்று ”உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. முகாமை தொடங்கி வைத்து மக்களின் குறைகளை கேட்டறிந்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் அஜிதா தலைமை வகித்த இந்த முகாமில், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.