நேற்று இரவு 7.30 மணியளவில் கீழ்குளம் பகுதியைச் சேர்ந்த ரெஜிகுமார் (49) தனது காரில் கருங்கல் நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். வில்லாரிவிளை பகுதியில் எதிரே வந்த மாருதி கார் மோதியதில் ரெஜிகுமாரின் கார் சேதமடைந்தது. அதைத் தொடர்ந்து, ரெஜிகுமாரின் காருக்குப் பின்னால் வந்த குட்டியானை வாகனமும் காரில் மோதி சேதமடைந்தது. இந்த விபத்தில் மாருதி வாகனத்தில் வந்த நபர் காயமடைந்துள்ளார். புதுக்கடை போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














