குமரி கேரளா எல்லையான களியக்காவிளை செக்-போஸ்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் பைக்கில் கொண்டு சென்ற ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. பத்மனாபபுரம் கோட்ட ஆய அலுவலர் இசபெல் வசந்தி ராணி மற்றும் அதிகாரிகள், போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.














