மடிச்சல் பகுதியைச் சேர்ந்த அஜித் என்பவரின் வீட்டிற்குள் தீயுடன் நுழைந்த தீக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்த தீபக் ராஜ் மற்றும் அவருடன் வந்த நபர் ஒருவர், அஜித்தின் வீட்டுக் கதவு மற்றும் ஜன்னல் மீது பாட்டிலில் திரவத்தை வீசியுள்ளனர். இதனால் கதவு, ஜன்னல் உடைந்து சேதமடைந்தன. இது குறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து தீபக் ராஜ் மற்றும் அவருடன் வந்த நபர் மீது விசாரணை நடத்தி வருகின்றனர்.
