வன்னியூர் பகுதியைச் சேர்ந்த 50 வயதான தொழிலாளி ஜெபராஜ், 5 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விபத்தில் காலில் ஏற்பட்ட காயத்தாலும், மது அருந்தும் பழக்கத்தாலும் மனைவியை இழந்த நிலையில், களியக்காவிளை சந்தை அருகே சாலையோரம் மயங்கிய நிலையில் கிடந்தார். குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து களியக்காவிளை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
