உலகக் கோப்பை தொடரில் ஆல்ரவுண்டரான இந்தியாவின் தீப்தி சர்மா, பேட்டிங்கில் 215 ரன்களும் பந்துவீச்சில் 22 விக்கெட்களையும் வேட்டையாடி இருந்தார். இதனால் அவர், தொடர் நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.
தீப்தி சர்மா கூறும்போது, ‘‘உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இது இன்னும் எனக்கு ஒரு கனவு போலவே தோன்றுகிறது. உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பங்களிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
சவால்மிகுந்த ஆட்டங்களை எனக்குப் பிடித்தமானவை. சூழ்நிலைக்கு ஏற்ப விளையாட வேண்டும் என்று நினைத்தேன். பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட முடிந்தது. சிறந்த ஆல்-ரவுண்டராக வலம் வர முடிந்தது.
தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வார்ட் மிகச்சிறந்த இன்னிங்ஸை விளையாடினார். களத்தில் அமைதியாக இருக்க முயற்சித்தோம். ஒருவருக்கொருவர் உற்சாகப் படுத்திக் கொண்டே இருந்தோம். இவ்வாறு தீப்தி சர்மா கூறினார்.
            













