கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் வட்டம் கீழ் மிடாலம் கிராமத்தில், இன்று பிற்பகல் சுமார் மூன்று முப்பது மணி அளவில் கடற்கரைக்குச் சென்ற முருகன் என்பவரது இரண்டு குழந்தைகளில், 14 வயது சிறுமி சுருதி கடல் அலையால் அடித்துச் செல்லப்பட்டார். சிறுவன் நீந்தி தப்பி வந்துள்ளான். சம்பவம் அறிந்து காவல் துறையினர், பொதுமக்கள் மற்றும் கடலோர காவல் படையினர் சிறுமியைத் தேடி வருகின்றனர்.
