‘ட்​ரம்ப் தனது போக்கை மாற்றாவிட்டால் இந்​தி​யா​வின் நட்புறவை இழக்க நேரிடும்’ – சிட்னி காம்​லாகர் எச்சரிக்கை

0
26

அமெரிக்க அதிபர் டொ​னால்டு ட்ரம்ப் தனது போக்கை மாற்​றிக்​கொள்​ளா​விட்​டால் இந்​தி​யா​வின் நடப்​புறவை இழக்க நேரிடும் என்று கலிபோர்​னி​யா​வைச் சேர்ந்த ஜனநாயக கட்சி எம்.பி.சிட்னி காம்​லாகர்-டோவ் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் கூறிய​தாவது: இந்​தி​யாவை நோக்​கிய அமெரிக்க அதிபர் ட்ரம்​பின் கொள்கை இரு​நாடு​களுக்கு இடையிலான நீடித்த நம்​பிக்கை மற்​றும் பரஸ்பர புரிதலுக்கு சேதத்தை ஏற்​படுத்​தும் விதத்​தில் அமைந்​துள்​ளது. இந்த விவகாரத்​தில் ட்ரம்ப் தனது கடின​மான போக்கை மாற்​றிக் கொள்ள வேண்​டும்.

அப்​படி மாற்​றிக்​கொள்​ளா​விட்​டால் இந்​திய நடப்​புற​வின் இழப்​புக்கு காரண​மானவ​ராக வரலாற்​றில் அதிபர் ட்ரம்​பின் பெயர் இடம்​பெறும். இரு தரப்பு உறவிலும் ஏற்​படும் சேதத்தை குறைக்க அமெரிக்கா மின்​னல் வேகத்​தில் தற்​போது செயல்பட வேண்​டியது அவசி​யம். அமெரிக்​கா​வின் இந்​திய புறக்​கணிப்பு ரஷ்ய சாம்ராஜ்யத்தை புத்​து​யிர் பெறச் செய்​து​விடும்.

இந்​தியா மீதான ட்ரம்​பின் விரோதம் எங்​கிருந்து தொடங்​கியது என்​பது பற்றி வரலாற்று புத்​தகங்​கள் எழுதப்​படும் ​போது அவை நமது நீண்ட கால நலன்​களுக்கு தொடர்பு இல்​லாத ஒன்றை சுட்டிக்​காட்​டும். இவ்​வாறு அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here