ஹங்கேரி எழுத்தாளர் லஸ்லோவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு

0
28

ஹங்கேரிய எழுத்தாளர் லஸ்லோ கிரஸ்​னாகோர்​காய்க்கு இலக்​கி​யத்​துக்​கான நோபல் பரிசு அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​தாண்​டுக்​கான நோபல் பரிசுகள் தற்​போது அறிவிக்​கப்​பட்டு வரு​கின்​றன. மருத்​து​வம், இயற்​பியல், வேதி​யியல் துறை​களுக்​கான நோபல் பரிசுகள் அறிவிக்​கப்​பட்ட நிலை​யில் நான்​காவ​தாக இலக்​கி​யத்​துக்​கான நோபல் பரிசு அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதை ஹங்​கேரியன் எழுத்​தாளர் லஸ்லோ கிரஸ்​னாகோர்​காய் வென்​றுள்​ளார்.

இவர் ஹங்​கேரி​யில் கடந்த 1954-ம் ஆண்டு பிறந்​தார். இவரது முதல் நாவல் ‘சாட்​டன்​டாங்​கோ’ கடந்த 1985-ம் ஆண்டு வெளி​யானது. இவர் எழு​திய ‘ஸ்​பேட்​வொர்க் பார் ஏ பேலஸ்: என்ட்​ரிங் தி மேட்​னஸ் ஆஃப் அதர்​ஸ்’ என்ற சிறுகதை​யும் பிரபலம் அடைந்​தது. இவரது படைப்​பு​கள் அனைத்​தும் தொலைநோக்கு கொண்​ட​வை. தீவிர​வாதம் அழிவை ஏற்​படுத்​திக் கொண்​டிருக்​கும் சூழலில், இவரது படைப்​பு​கள் கலை​யின் சக்​தியை வெளிப்​படுத்​துகின்​றன. இதற்​காக இவருக்கு நோபல் பரிசு அறிவிக்​கப்​பட்​டுள்​ள​தாக நோபல் பரிசுக் குழு தெரி​வித்​துள்​ளது.

மத்​திய ஐரோப்​பிய பாரம்பரியத்​தில் வந்த மிகச் சிறந்த இதி​காச எழுத்​தாள​ராக இவர் கருதப்​படு​கிறார். பிரபல எழுத்​தாளர்​கள் ஏனஸ்ட் ஹெமிங்​கேவ, டோனி​மாரிசன் ஆகியோர் அடங்​கிய பட்​டியலில் லஸ்லோ கிரஸ்​னாகோர்​கா​யும் இடம் பிடித்​துள்​ளார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here