திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை மறுநாள் (பிப்ரவரி 21) கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (பிப்.19) உருவாக வாய்ப்பு உள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.














