தேங்காப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த 47 வயது கூலி தொழிலாளி, தற்போது வெள்ளமோடி பகுதியில் வசித்து வருகிறார். இவரது 16 வயது மகள் மணவாளக்குறிச்சியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். கடந்த 21ஆம் தேதி காலை பள்ளிக்குச் சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடியும் மாணவி கிடைக்காததால், மாணவியின் தந்தை வெள்ளிச்சந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














