சீனாவின் சொத்து மேலாண்மை நிறுவனம் ஒன்றின் முன்னாள் நிர்வாகியை ஊழல் குற்றச்சாட்டில் சீன அரசு நேற்று தூக்கிலிட்டது.
சீனா ஹுவாரோங் சொத்து மேலாண்மை நிறுவனத்தின் துணை நிறுவனமாக ‘சீனா ஹுவாரோங் இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸ் (சிஎச்ஐஎச்)’ உள்ளது. இதன் பொது மேலாளராக இருந்தவர் பாய் தியான்ஹுய். இவர் 2014 முதல் 2018 வரை திட்டங்களை செயல்படுத்துவதில் 15.6 கோடி டாலர் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இதில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் நேற்று காலை தூக்கில் இடப்பட்டதாக சீன அரசின் ஊடகம் தெரிவித்துள்ளது.







