கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய நாகர்கோவிலுக்கு வந்த எடப்பாடி பழனிசாமி, ஆரல்வாய்மொழிக்கு பிரச்சார வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். ஒழுகீனசேரி சந்திப்பு அருகே பறக்கும் படையினர் அவரது தேர்தல் வாகனத்தை சோதனை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சோதனை தேர்தல் விதிமுறைகளின்படி மேற்கொள்ளப்பட்டது.












