கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே உள்ள பெரியகாடு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை யொட்டி நேற்று முன்தினம் மாலை கல்லறை தோட்டம் மந்திரிப்பு, ஜெப மாலை, புகழ்மாலை, திருப்பலி ஆகியவை நடைபெற்றது. விழாவில் நேற்று கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை கொடியேற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றினார். திருவிழா வருகிற 8-ந் தேதி வரை 13 நாட்கள் நடைபெறும்.














