டெல்லியில் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்காக இறந்த பெண்ணின் உடலில் ரத்த ஓட்டம் கொண்டு வந்த டாக்டர்கள்

0
10

டெல்​லி​யில் உறுப்​பு​களை தானம் செய்​வதற்​காக இறந்த பெண்​ணின் உடலில் மீண்​டும் ரத்த ஓட்​டத்தை கொண்டு வந்து மருத்​து​வர்​கள் சாதனை படைத்​துள்​ளனர்.

டெல்லி துவாரகா பகு​தியை சேர்ந்தவர் கீதா சாவ்லா (55). நரம்​பியல் கோளாறு காரண​மாக பக்​க​வாதம் ஏற்​பட்டு படுத்த படுக்​கை​யாக இருந்​தார். கடந்த 5-ம் தேதி அவருக்கு மூச்​சுத் திணறல் ஏற்​பட்​டது. இதையடுத்து துவார​கா​வின் எச்​சிஎம்​சிடி மணிப்​பால் மருத்​து​வ​மனை​யில் கீதாவை சேர்த்​தனர். அங்கு அவருடைய உடல்​நிலை மிக​வும் மோசமடைந்​தது. அவர் உயிர்ப் பிழைக்க வாய்ப்​பில்லை என்ற நிலை ஏற்​பட்​டது. இதையடுத்து வென்​டிலேட்​டர் போன்ற உயிர்க் காக்​கும் கருவி​கள் உதவி​யுடன் கீதாவை வைத்​திருக்க அவரது குடும்​பத்​தினர் விரும்​ப​வில்​லை. பின்​னர் நவம்​பர் 6-ம் தேதி இரவு கீதா உயி​ரிழந்​தார்.

ஆனால், தனது உறுப்​பு​களை தானம் செய்ய வேண்​டும் என்று கீதா கடைசி ஆசையை தெரி​வித்​திருந்​தார். அதன்​படி, அவரது உறுப்​பு​களை தானம் அளிக்க முடி​வெடுக்​கப்​பட்​டது. இதையடுத்​து, கீதா​வின் உடலுக்கு பிரேதப் பரிசோதனை​யின்போது மருத்​து​வர் குழு​வினர் மிக​வும் சிக்​கலான மற்​றும் அரி​தான செயலை செய்​தனர். கீதா​வின் வயிற்​றுப் பகு​தி​யில் உள்ள உறுப்​பு​களை எடுத்து தானம் செய்​வதற்​காக, அந்​தப் பகு​தி​யில் மீண்​டும் ரத்த ஓட்​டத்தை கொண்டு வந்​தனர். இதை நார்​மோதெர்​மல் ரீஜினல் பர்​பியூஷன் (என்​ஆர்​பி) செயல்​முறை என்​கின்​றனர்.

இதன்​படி மருத்​து​வர்​கள் வெற்​றிகர​மாக கீதா​வின் வயிற்​றுப் பகு​தி​யில் உள்ள உறுப்​பு​களுக்கு ரத்த ஓட்​டத்தை கொண்டு வந்​தனர். பின்​னர் அந்த உறுப்​பு​கள் எடுக்​கப்​பட்டு தான​மாக வழங்​கப்​பட்​டன. இதயம் செயலிழந்த 5 நிமிடத்​துக்கு பிறகு கீதா​வின் உயிர் பிரிந்​து​விட்​டது என்று அதி​காரப்​பூர்​வ​மாக அறிவிக்​கப்​பட்​டது.

ஆசி​யா​விலேயே இது​போல் இறந்த பெண்​ணின் உடலுக்கு ரத்த ஓட்​டத்தை கொண்டு வந்து உறுப்​பு​களை எடுத்த மருத்​துவ நடை​முறை டெல்லி மணிப்​பால் மருத்​து​வ​மனை​யில்​தான் நடந்​துள்​ளது என்று மணிப்​பால் இன்​ஸ்​டிடியூட்​டின் தீவிர சிகிச்​சைப் பிரி​வின் தலை​வர் ​ஸ்ரீகாந்த் ஸ்ரீனி​வாசன் கூறி​னார்.

இந்​தி​யா​வில் இதயம் இயங்​கி​னாலும், மூளை சாவு அடைந்​தவர்​களின் உடல் உறுப்​பு​கள்​தான் தானம் வழங்​கப்​படு​வது வழக்​கம். ஆனால், இதயம் செயலிழந்து ரத்த ஓட்​டம் நின்ற பிறகு உறுப்​பு​களை பாது​காப்​பது சிக்​கலானது. இதில் நேரம் மிகமிக சிக்​கலானது. ஆனால், என்​ஆர்பி நடை​முறையை பயன்​படுத்தி இதயம் நின்ற பிறகும் உடனடி​யாக ரத்த ஓட்​டத்தை கொண்டு வந்து அவருடைய கல்​லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்​பு​களை பாது​காத்​தோம் என்று அவர் தெரி​வித்​தார்.

இதையடுத்​து, கீதா​வின் உறுப்​பு​களை உடனடி​யாக வேறு நோயாளி​களுக்​குப் பொருத்​து​வதற்​கான ஏற்​பாடு​களை தேசிய உறுப்பு மற்​றும் திசுக்​கள் மாற்று அமைப்பு ஏற்​பாடு செய்​தது. அதன்​படி கீதா​வின் கல்​லீரல் ஐஎல்​பிஎஸ் மருத்​து​வ​மனை​யில் 48 வயது ஆணுக்​கும், 2 சிறுநீரகங்​கள் மேக்ஸ் மருத்​து​வ​மனை​யில் 2 ஆண்​களுக்​கும் பொருத்​தப்​பட்​டன. கீதா​வின் கரு​விழிகள், தோல் கூட தானம் செய்​யப்​பட்​டது.

இதுகுறித்து மணிப்​பால் மருத்​து​வ​மனை டாக்​டர் அவி​னாஷ் சேத் கூறும்​போது, ‘‘தற்​போது ஆசி​யா​விலேயே முதல் முறை​யாக ரத்த ஓட்​டத்தை மீண்​டும் கொண்டு வந்து உறுப்​பு​கள் பத்​திர​மாக எடுக்​கப்​பட்​ட​தால், எதிர்​காலத்​தில்​ இறந்​த பிறகும்​ உறுப்​பு தானம்​ வழங்​கு​வது சாத்​தி​ய​மாகும்​’’ என்​று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here