தொல்காப்பியர் அறக்கட்டளைக் கூட்டம் தலைவர் மு. பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. இதில், தொல்காப்பியர் பிறந்த தினமான மே 1ஆம் தேதி அன்று பள்ளிக் கல்லூரி மாணவியருக்குப் போட்டிகள் நடத்தியும், சிறந்த தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்கியும் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. செயலாளர் சஜீவ் அனைவரையும் வரவேற்றார். ரெஜி கலா ‘சங்கத் தமிழ்’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.














