தொழிலாளர் நல துறை சார்பில் ரூ.27.33 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

0
45

தொழிலாளர் நலன், வேலை​வாய்ப்பு பயிற்சி துறை சார்​பில் பல்வேறு மாவட்​டங்​களில் ரூ.27.33 கோடி​யில் கட்டப்​பட்ட அலுவல​கங்​கள், மாணவர் விடுதி உள்ளிட்ட புதிய கட்டிடங்களை முதல்வர் ஸ்டா​லின் நேற்று திறந்து வைத்​தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளி​யிட்ட செய்திக்​குறிப்​பில் கூறப்​பட்​டு உள்ள​தாவது: தொழிலாளர் நலன், திறன் மேம்​பாட்டு துறை சார்​பில் விழுப்புரம் மாவட்டம் வி.மருதூரில் ரூ.3.71 கோடி​யிலும், ராமநாத​புரம் மாவட்டம் பட்ட​ணம்​காத்​தான் கிராமத்​தில் ரூ.4.42 கோடி​யிலும் ஒருங்​கிணைந்த தொழிலாளர் நலத் துறை அலுவலக வளாக கட்டிடங்கள் கட்டப்​பட்​டுள்ளன.

அரசு ஐடிஐ அலுவலக கட்டிடம்: அதேபோல, வேலை​வாய்ப்பு பயிற்சி துறை சார்​பில் சேலம், புதுக்​கோட்டை மாவட்டம் – விராலிமலை, சென்னை – வண்ணாரப்​பேட்டை, தஞ்சாவூர் – ஒரத்​தநாடு, கிருஷ்ணகிரி – தேன்​க​னி்க்​கோட்டை ஆகிய இடங்​களில் ரூ.19.20 கோடி​யில் அரசு ஐடிஐ அலுவலக கட்டிடம், மாணவர் தங்கும் விடுதி, புதிய தொழிற்​பிரிவு கட்டிடம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன.

இவ்வாறு மொத்தம் ரூ.27.33 கோடி செலவில் கட்டப்​பட்​டுள்ள புதிய கட்டிடங்​களை, சென்னை தலைமைச் செயல​கத்​தில் இருந்து முதல்வர் ஸ்டா​லின் நேற்று காணொலி​யில் திறந்து வைத்​தார்.

அமைச்சர்கள் பங்கேற்பு: வனத் துறை அமைச்சர் பொன்​முடி, தொழிலாளர் நலன், திறன் மேம்​பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன், தலைமைச் செயலர் நா.முரு​கானந்​தம், தொழிலாளர் நல ஆணையர் அதுல் ஆனந்த், தொழிலாளர் நலன், திறன் மேம்​பாட்டு துறை செயலர் கொ.வீரராகவ ராவ், வேலை​வாய்ப்பு, ப​யிற்சி துறை இயக்​குநர் பா.​விஷ்ணு சந்​திரன் உள்​ளிட்​டோர் உடன் இருந்​தனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here