சென்னை ஓபன் டென்னிஸ்: 2-வது நாள் ஆட்டங்களும் ரத்து

0
26

சென்னை ஓபன் மகளிர் சர்​வ​தேச டென்​னிஸ் போட்டி நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள எஸ்​டிஏடி டென்​னிஸ் மைதானத்​தில் நேற்​று ​முன்​தினம் தொடங்​கு​வ​தாக இருந்​தது. ஆனால் மோந்தா புயல் காரண​மாக மழை பெய்​த​தால் மைதானத்​தில் உள்ள அனைத்து ஆடு​களங்​களி​லும் தண்​ணீர் தேங்​கியது. இதன் காரண​மாக முதல் நாளில் நடை​பெற இருந்த அனைத்து ஆட்​டங்​களும் ஒத்​திவைக்​கப்​பட்​டன. இந்த ஆட்​டங்​கள் 2-வது நாளான நேற்று நடை​பெறும் என அறிவிக்​கப்​பட்​டிருந்​தது.

போட்​டிகளை பகல் 12 மணிக்கு தொடங்க திட்​ட​மிட்டு இருந்​தனர். ஆனால் தொடர் மழை​யால் ஆடு​களங்​களில் தண்​ணீர் தேங்​கிய​தால் திட்​ட​மிட்​டபடி ஆட்​டங்​களை நடத்த முடிய​வில்​லை. இதைத் தொடர்ந்து பிற்​பகல் 2.30 மணிக்கு போட்​டிகள் தொடங்​கும் என அறிவிக்​கப்​பட்​டது. ஆனால் அதற்​கும் வழி​யில்​லாமல் போனது. முடி​வில் 2-வது நாளி​லும் எந்​த​வித ஆட்​டங்​களும் நடை​பெற​வில்​லை.

இதையடுத்து 3-வது நாளான இன்று போட்​டிகள் தொடங்​கும் எனவும், பகல் 11 மணி முதல் ஆட்​டங்​கள் நடத்​தப்​படும் என போட்டி அமைப்​பாளர்​கள் தெரி​வித்​துள்​ளனர். ஒற்​றையர் பிரிவுடன், இரட்​டையர் பிரிவு ஆட்​டங்​களும் இன்று முதல் நடத்த முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இன்று ஒற்​றையர் பிரி​வில் முதல் சுற்று ஆட்​டங்​கள் அனைத்தும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here