மேல்புறம் பகுதியைச் சேர்ந்த 56 வயதான தொழிலாளி அனில் குமார், முதல் மனைவி இறப்பு மற்றும் இரண்டாம் மனைவி பிரிந்து சென்றதால் தனிமையில் வாடி வந்தார். இந்நிலையில், நேற்று அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, கதவை உடைத்து பார்த்தபோது அனில் குமார் அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து அவரது மகன் அரவிந்த் அளித்த புகாரின் பேரில் அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.