குழித்துறை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் (47) கடந்த 31ஆம் தேதி சங்கரன்கோவிலில் பாதுகாப்பு பணிக்குச் சென்ற பிறகு வீடு திரும்பவில்லை. அவரது மனைவி சிமி (45) தொடர்பு கொள்ள முயன்றபோது செல்போன் அணைக்கப்பட்டிருந்தது. பல்வேறு இடங்களில் தேடியும் லட்சுமணன் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால், அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.