அருமனை அருகே தேவிகோடு ஊராட்சிக்கு உட்பட்ட குறக்கோடு புலியூர் சாலையோரம் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான பகுதியில் நின்ற மாமரம் ஒன்று வெட்டப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த ராட்சத மரத்தின் துண்டுகள் அகற்றப்படாமல் சாலையோரம் பல வருடங்களாக கிடக்கிறது. அந்த மரத்தின் துண்டுகள் அரிக்கப்பட்டு விஷ ஜந்துக்கள் வாழும் இடமாக மாறியிருக்கிறது. சாலை மார்க்கமாக மக்கள் நடந்து செல்லும்போது பாம்புகள் சீறிப்பாய்ந்து சாலையை கடந்து செல்லும் சம்பவம் நடக்கிறது. எனவே அந்த பகுதி வழியாக இரவில் நடந்து செல்ல பொதுமக்கள் அச்சமடைகின்றனர். அதேபோல் சாலையில் கனரக வாகனங்கள் வரும்போது எதிரே வரும் வாகனங்கள் இடம் கொடுக்க வழியில்லாததால் விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே வெட்டப்பட்ட ராட்சத மரத்தை அப்புறப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Latest article
தெருவில் யாசகம் பெற்று வாழும் ஹாலிவுட் நடிகர் – ரசிகர்கள் அதிர்ச்சி
அமெரிக்காவில் கடந்த 2004-முதல் 2007-ம் ஆண்டு வரை மூன்று சீசன்களாக வெளியான சின்னத்திரை தொடர், ‘நெட்’ஸ்டிகிளாசிஃபைட் ஸ்கூல் சர்வைவல் கைடு’.
இதில் மார்ட்டின் என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களின் அன்பைப் பெற்றவர் டெய்லர் சேஸ்....
1980-ல் நடக்கும் கதையில் விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ்
விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்துக்கு ‘ரவுடி ஜனார்த்தனா’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் நாயகியாகக் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ரவி கிரண் கோலா இயக்கும் இந்தப் படத்தை, ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில்...
‘சிங்கிள் பசங்க’ டைட்டிலை வென்றார் கூமாபட்டி தங்க பாண்டி!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி ‘சிங்கிள் பசங்க’. சிங்கிளாக இருக்கும் யூடியூப் பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்களுடன் இணைந்து பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப்பெற்று வருகிறது.
டி.ராஜேந்தர், கனிகா...








