அருமனை பகுதியைச் சேர்ந்த அந்தோணி ராஜ் மகள் ஷோபனா (27), துணிக்கடையில் வேலை செய்து வந்தார். வருகிற 28ஆம் தேதி இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பாததால், உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தாயார் சோபி, அருமனை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஷோபனாவைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
