டெல்லியில் குண்டு வெடித்த காருடன் சுற்றிய மற்றொரு கார் ஹரியானாவில் பறிமுதல்

0
9

டெல்​லி​யில் குண்டு வெடித்த காருடன் சுற்​றிவந்​த​தாக கருதப்​படும் மற்​றொரு கார் பரி​தா​பாத் அருகே பறி​முதல் செய்​யப்​பட்​டது.

டெல்​லி​யில் கடந்த திங்​கட்​கிழமை மாலை ஒரு கார் வெடித்​துச் சிதறியது. ஜெய்ஷ் இ முகமது தீவிர​வா​தி​யின் தற்​கொலை தாக்​குதலாக இது கருதப்​படு​கிறது. இது தொடர்​பாக சுமார் 200 சிசிடிவி கேம​ராக்​களின் பதிவு​கள் ஆராயப்​பட்டு வரு​கின்​றன. இதில் குண்டு வெடித்த ஹுண்​டாய் ஐ20 காருடன் சிவப்பு நிற ‘ஈகோ ஸ்பாட்’ காரும் சுற்றி வந்​தது பதி​வாகி உள்​ளது. இந்த சிவப்பு காரில் டெல்லி பதிவு எண் உள்​ளது.

இரு கார்​களும் அன்று மதி​யம் செங்​கோட்டை முன்​பாக அரு​கருகே நிறுத்​தப்​பட்​டிருந்​தது தெரிய​வந்​துள்​ளது. எனவே அந்த சிவப்பு நிற கார் தீவிர​வா​தி​களின் காரா என்ற சந்​தேகத்​தின் அடிப்​படை​யில் டெல்லி போலீ​ஸார் அதை தீவிர​மாக தேடி வந்​தனர். இந்​நிலை​யில் பரி​தா​பாத் அருகே உள்ள கண்​ட​வலி கிராமத்​தில் கேட்​பாரற்று இருந்த அந்த சிவப்பு நிற காரை போலீ​ஸார் பறி​முதல் செய்​தனர்.

வெடித்து சிதறிய காரில் இருந்த டாக்​டர் உமர் கிராமத்​தி​லும் போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்​டுள்​ளனர். உமரின் தாய், தந்தை மற்​றும் இரண்டு சகோ​தரர்​களிடம் தீவிர விசா​ரணை நடை​பெறுகிறது. தங்​கள் மகன் உமருக்கு விரை​வில் மணமுடிக்​கும் பணி​யில் இருந்​த​தாக பெற்​றோர் கூறி​யுள்​ளனர். உமர் மணமுடிக்க இருந்த பெண்​ணும் ஒரு மருத்​து​வர்.

காஷ்மீரைச் சேர்ந்த இவர் யூபிஎஸ்சி தேர்​வுக்கு தயா​ராகி வந்​துள்​ளார். கடைசி​யாக நவம்​பர் 8-ல் உமரிடம் அவரது குடும்​பத்​தார் போனில் பேசி​யுள்​ளனர். இதன் பிறகு உமரின் செல்​போன் அணைக்​கப்​பட்டு இருந்​துள்​ளது.

உமர் அவரது நண்​பர் முஜம்​மில் ஆகிய இரு​வரும் பணி​யாற்​றிய பரி​தா​பாத் அல் பலா பல்​கலைக்​கழக மருத்​து​வக் கல்​லூரி​யில் டெல்லி சிறப்பு படை மற்​றும் என்ஐஏ அதி​காரி​கள் நேற்று சுமார் இரண்​டரை மணி நேரம் சோதனை நடத்​தினர். இதி​லும்​ சில முக்​கி​யத்​ தடயங்​கள்​ கிடைத்​துள்​ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here