Home தேசிய செய்திகள் பிரதமர் இல்லத்தில் அமித் ஷா, நிதின் நவீன் அவசர ஆலோசனை

பிரதமர் இல்லத்தில் அமித் ஷா, நிதின் நவீன் அவசர ஆலோசனை

0

 ​நா​டாளு​மன்ற மழைக்​காலக் கூட்​டத்​தொடர் அடுத்த வாரம் தொடங்​க​வுள்ள நிலை​யில், பிரதமர் இல்​லத்​தில் பாஜக உயர்​நிலைக் குழு​வின் அவசர ஆலோ​சனைக் கூட்​டம் நடைபெற்றது.

இதில் மத்​திய அமைச்​சர் அமித் ஷா, பாஜக தலை​வர் நிதின் நவீன் உள்​ளிட்ட மூத்த தலை​வர்​கள் கலந்துகொண்​டனர். இக்​கூட்​டத்​தில் என்ன விவா​திக்​கப்​பட்​டது என்​பது குறித்த அதி​காரப்பூர்வ விவரங்கள் வெளி​யாக​வில்​லை.

எனினும், பாஜக தேசிய நிர்​வாகி​கள் மற்​றும் மத்​திய அமைச்சரவை​யில் மாற்​றம் செய்​யப்​படலாம் என்ற பேச்சு நில​வும் சூழலில் இக்​கூட்​டம் நடந்​துள்​ளது. இதற்​கிடையே, கூட்​ட​ணிக் கட்சிகளின் நாடாளு​மன்ற வியூ​கம் குறித்து விவா​திக்க, தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யின் (என்​டிஏ) ஆலோ​சனைக் கூட்​டம் வரும் ஜூலை 21-ல் நடை​பெறவுள்​ள​தாகத் தெரி​கிறது.

சோனியா, ராகுல்: மறு​புறம், சோனியா காந்​தி​யின் ‘10, ஜன்பத்’ இல்​லத்​தில் காங்​கிரஸ் மூத்த தலை​வர்​களின் ஆலோ​சனைக் கூட்டம் நடை​பெற்​றது. கட்​சித் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே, ராகுல் காந்​தி, ப.சிதம்​பரம், சசி தரூர் உள்​ளிட்​டோர் பங்​கேற்ற இக்கூட்​டத்​தில் நாடாளு​மன்ற வியூ​கங்​கள் குறித்து விவாதிக்கப்பட்​டது. இதைத் தொடர்ந்​து, எதிர்க்​கட்​சிகளின் ‘இண்டி​யா’ கூட்​ட​ணி​யும் வரும் திங்​கட்​கிழமை கூடித் தங்​களின் கொள்​கையை வகுக்​க​வுள்​ளது.

நீட் வினாத்​தாள் கசிவு, அயோத்தி ராமர் கோயில் நன்​கொடை முறை​கேடு புகார், எரிபொருள் விலை உயர்வு மற்​றும் இந்​தி​யா-அமெரிக்கா வர்த்தக ஒப்​பந்​தம் ஆகிய பிரச்​சினை​களை எழுப்பி மத்​திய அரசுக்கு நெருக்​கடி கொடுக்க எதிர்க்​கட்​சிகள் தயா​ராகி வரு​கின்​றன. இதற்​கிடையே, கூட்​டத்​தொடர் சுமுக​மாக நடைபெறு​வது குறித்து விவா​திக்க மத்​திய அரசு வரும் ஞாயிற்றுக் ​கிழமை அனைத்​துக் கட்​சிக் கூட்​டத்​தைக் கூட்டியுள்ளது.

இந்நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் துணை இணை அமைச்சர் ராம்தாஸ் அதவாலே நேற்று தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்துக்கு வந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போது அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணமூல் கட்சிகளால் தோற்கடிக்கப்பட்டன. ஆனால் வரும் மழைக்காலக் கூட்டத் தொடரின்போது மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை மசோதா உள்ளிட்டவை நிறைவேற்றப்படும். நாடாளுமன்ற அவைகளில் எங்களுக்கு மூன்றில் 2 பங்கு மெஜாரிட்டி உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எழு​தி​யுள்ள கடிதத்​தில், “நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தொகுதி மறு​வரையறை மசோ​தா​வைத் தாக்கல் செய்​ய ​வேண்​டும் என்​றால் அதுதொடர்​பாக விரி​வாக விவா​திக்க வேண்​டும்” என்று வலியுறுத்தி உள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version