கேசவபுரம் பத்ரகாளியம்மன் கோவில் தேவ பிரசன்னம்

0
415

திருவட்டாறு அருகே கேசவபுரம், ஆனைபூந்திகுளம் பத்ரகாளியம்மன், பூதத்தான் கோவில் அமைந்துள்ளது. பிரதித் திபெற்ற இந்த கோவிலில் தினமும் காலை மாலை பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். இந்த கோவிலில் தினம் சுற்றுவட்டார பகுதி மக்கள் ஏராளம் பேர் வந்து செல்கின்றனர்.

      இந்த நிலையில் கோவிலில்  தேவ பிரசன்னம் பார்க்க வேண்டும் என்ற  பக்தர்களின் கோரிக்கையின் பேரில்  நிகழ்ச்சி நேற்று கோவில் வளாகத்தில் நடந்தது. மார்த்தாண்டம் நாகராஜன் போற்றி சோழி உருட்டி தேவபிரசன்னம் பார்த்து பலன் கூறினார்.

    மேலும் பிரசித்தி பெற இசக்கி அம்மனுக்கு தனி சன்னதி அமைக்க வேண்டும் என பிரசன்னத்தில் தெரிவிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here