​திருமலை​யில் பிரம்மோற்சவ விழா

0
20

ஏழு​மலை​யான் குடி​கொண்​டுள்ள திரு​மலை​யில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவ விழாக்​கள் நடை​பெற உள்​ளன. முதல் பிரம்​மோற்சவ விழா வரும் 15-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கு​கிறது.

செப்​டம்​பர் மாத பிரம்​மோற்​சவத்​திற்கு வரும் 8-ம் தேதி கோயில் ஆழ்​வார் திரு​மஞ்சன நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 14-ம் தேதி அங்​கு​ரார்பன நிகழ்ச்சி நடை​பெறும். இதனை தொடர்ந்து 15-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை தொடர்ந்து காலை 8 – 10 மணி, இரவு 7-9 வரை வாகன சேவை​கள் நடைபெறும். 19-ம் தேதி கருட வாகன சேவை மட்​டும் அன்று மாலை 6.30 மணிக்கு தொடங்​கு​கிறது. 22-ம் தேதி தேர்த் திரு​விழா​வும், 23-ம் தேதி சக்கர ஸ்நான நிகழ்ச்சியுடன் வரு​டாந்​திர பிரம்​மோற்சவ விழா நிறை​வும் பெறுகிறது.

இதில் வரும் 15-ம் தேதி மாலை ஆந்​திர அரசு தரப்​பில் சுவாமிக்கு பட்டு வஸ்​திரத்தை முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு காணிக்​கை​யாக வழங்க உள்​ளார். இதையடுத்​து, அக்​.12-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நவராத்​திரி பிரம்​மோற்சவ விழா​வும் நடத்​தப்பட உள்​ளது.

களை கட்​டும் திரு​மலை

பிரம்​மோற்சவ விழா நெருங்​கு​வதை முன்​னிட்​டு, பல இடங்​களில் தோரணங்​கள், அலங்​கார வளைவு​கள் பொருத்​தப்​பட்டு வரு​கிறது. மாட வீதி​களில் ஜெர்​மன் ஷெட்​கள் அமைக்​கும் பணி நடை​பெற்று வரு​கிறது. ஏழு​மலை​யான் கோயில் முகப்பு கோபுரத்​தில் மராமத்து பணி​களும், வெள்ளை அடிக்​கும்​ பணி​களும்​ நடை​பெற்று வருகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here