“மக்கள் வெளிநாடு செல்லக் கூடாது என்கிறார்; ஆனால் அவரே பல நாடுகளுக்கு பறக்கிறார்” – பிரதமரின் பயணங்கள் குறித்து ராகுல் விமர்சனம்

0
17

மக்​கள் வெளி​நாடு செல்லக் கூடாது என்று பிரதமர் நரேந்​திர மோடி கூறுகிறார், ஆனால் அவரே ஆயிரக்​கணக்​கான கோடி ரூபாய் மதிப்​புள்ள விமானத்தில் பறக்​கிறார் என்று ராகுல் கூறி​யுள்​ளார்.

உ.பி.​யின் ரேபரேலி​யில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்சி ஒன்​றில் மக்களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி பேசி​ய​தாவது: வெளி​நாடு செல்​லாதீர்​கள், தங்​கம் வாங்​காதீர்​கள், மின்​சார வாகனங்​களை வாங்​குங்​கள் என்று பிரதமர் நரேந்​திர மோடி கூறுகிறார். ஆனால் அவரே ஆயிரக்​கணக்​கான கோடி ரூபாய் மதிப்​புள்ள விமானத்தில் வெளி​நாடு செல்​கிறார்.

தேர்​தலுக்கு முன் பெட்​ரோல், எரி​வாயு பற்​றாக்​குறை இல்லை என்று கூறப்​பட்​டது. பெட்​ரோல் விலை உயராது என்​றும் கூறப்பட்டது. இன்று பெட்​ரோல் விலை உயர்ந்து வரு​கிறது. அம்பானி இந்தியா​விலிருந்து வெளி​நாடு​களுக்​குப் பெட்​ரோலை ஏற்​றுமதி செய்​கிறார். அம்​பானி ரஷ்​யா​விலிருந்து பெட்​ரோலை வாங்​கி, அதை வெளி​நாடு​களில் விற்​கிறார்.

அந்​தப் பணத்​தைக் கொண்டு அவர்​கள் பிரதமர் நரேந்​திர மோடிக்கு நிதி அளிக்​கிறார்​கள். இதுவே உண்​மை. இந்​தி​யா​வின் பொருளா​தார அமைப்பை அம்​பானி, அதானி மற்​றும் அமெரிக்கா​விடம் அவர் ஒப்​படைத்​து​விட்​டார். இப்​போது ஒரு பொருளா​தா​ரப் புயல் வரவிருக்​கிறது. பிரதமர் நரேந்​திர மோடியாலும் இந்​திய அரசாலும் உங்​களைக் காப்​பாற்ற முடி​யாது.

இதில் எங்​கள் தவறு ஏது​மில்லை என்று அவர்​கள் அழுது​கொண்டே கூறு​வார்​கள். ஆனால் நான் உங்​களுக்​குச் சொல்​கிறேன். இந்​தத் தவறு பிரதமர் நரேந்​திர மோடி, அமித் ஷா மற்​றும் ஆர்​எஸ்​எஸ் அமைப்​பிடம் மட்​டுமே உள்​ளது. ஏனெனில் அவர்​கள் அரசியலமைப்பை அழித்​து​விட்​டார்​கள். வரும் காலங்​கள் மிக​வும் கடின​மாக இருக்​கப் போகின்​றன.

முன்​னெப்​போதும் இல்​லாத கடுமை​யான பணவீக்​கம் நாட்​டில் ஏற்படப்​போகிறது. அனைத்​துப் பொருட்​களின் விலை உயரும். நாட்​டில் உரப் பற்​றாக்​குறை ஏற்​படும் என்​ப​தால் விவ​சா​யிகள் பெரும் துயரத்​திற்கு ஆளா​வார்​கள். எண்​ணெய் மற்​றும் எரி​வாயு விநி​யோகம் நின்​று​போகும். இவ்​வாறு ராகுல்​ பேசி​னார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here