பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் புதின் செப்டம்பரில் டெல்லி வருகை

0
19

பிரிக்ஸ் உச்சி மாநாட்​டில் பங்​கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வரும் செப்​டம்​பர் மாதம் டெல்லி வரு​கிறார்.

பிரிக்ஸ் கூட்​டமைப்​பில் பிரேசில், ரஷ்​யா, இந்​தி​யா, சீனா, தென் ஆப்​பிரிக்​கா, எகிப்​து, எத்​தி​யோப்​பி​யா, ஈரான், ஐக்​கிய அரபு அமீரகம், இந்​தோ​னேசியா ஆகிய நாடு​கள் உறுப்​பினர்​களாக உள்​ளன. இந்த அமைப்​பின் 2026-ம் ஆண்​டுக்​கான தலை​மையை இந்​தியா ஏற்​றிருக்​கிறது. இதன்​படி கடந்த 14-ம் தேதி பிரிக்ஸ் வெளி​யுறவு அமைச்​சர்​களின் மாநாடு டெல்​லி​யில் நடை​பெற்​றது. இதில் உறுப்பு நாடு​களின் வெளி​யுறவு அமைச்​சர்​கள் பங்​கேற்​றனர்.

இதைத் தொடர்ந்து வரும் செப்​டம்​பர் 12, 13 ஆகிய தேதி​களில் டெல்​லி​யில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடை​பெற உள்​ளது. இதில் பிரிக்ஸ் கூட்​டமைப்பு நாடு​களின் பிரதமர்​கள், அதிபர்​கள் பங்​கேற்க உள்​ளனர். இந்த மாநாட்​டில் பங்​கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் செப்​டம்​பர் மாதம் இந்​தி​யா​வுக்கு வருகை தரு​கிறார். தென்​னாப்​பிரிக்​கா​வில் செயல்​படும் ரஷ்ய தூதரகம் ரஷ்ய அதிபரின் டெல்லி வரு​கையை உறுதி செய்​திருக்​கிறது.

அதிபர் புதினின் வரு​கைக்கு பிறகு பிரதமர் நரேந்​திர மோடி ரஷ்​யா​வில் சுற்​றுப் பயணம் மேற்​கொள்ள உள்​ளார். இதுகுறித்து ரஷ்ய வெளி​யுறவுத் துறை அமைச்​சர் செர்ஜி லாவ்​ரோவ் அண்​மை​யில் கூறும்​போது, “இந்​தி​யா, ரஷ்யா உச்சி மாநாடு ஆண்​டு​தோறும் நடத்​தப்​பட்டு வரு​கிறது. 2026-ம் ஆண்​டுக்​கான மாநாடு ஆண்டு இறு​தி​யில் ரஷ்​யா​வில் நடை​பெற உள்​ளது. இதில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​பார். அப்​போது இரு நாடுகளுக்கு இடையே பல்​வேறு ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகும்’’ என்றார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here