ஈரான் மீதான தாக்குதலில் டொமஹாக், தொலைதூர ஏவுகணைகளை பயன்படுத்திய அமெரிக்கா, இஸ்ரேல்

0
14

‘ரோரிங் லயன்’ என்ற பெயரில் இஸ்​ரேலும், ‘எபிக் ஃப்​யூரி’ என்ற பெயரில் அமெரிக்கா​வும் ஒன்​றிணைந்து நடத்திய தாக்​குதலில் ஈரான் உச்ச தலைவர் காமேனி, ஈரான் தேசிய பாது​காப்பு கவுன்​சில் முன்​னாள் செய​லா​ளர் அலி சம்​கானி, ஈரான் ராணுவ கமாண்​டர் முகமது பக்​போர் ஆகியோர் இறந்​தனர்.

இந்த தாக்​குதலில் அயத்​துல்லா அலி காமேனி​யின் மகள், மரு​மகன், பேத்தி ஆகியோ​ரும் இறந்​தனர். இதே​போல் ஈரானின் இஸ்ஃ​பாகன் மற்​றும் சிராஸ் ஆகிய முக்கிய பகு​தி​களி​லும் தாக்​குதல் நடத்​தப்​பட்​டன. இந்த தாக்​குதலில் இஸ்​ரேல் மற்​றும் அமெரிக்க படைகள் பயன்​படுத்​திய ஆயுதங்​கள் பற்​றிய தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன. அவற்​றின் விவரம்​

டொமஹாக் ஏவுகணை

இது அமெரிக்க கடற்​படை பயன்​படுத்​தும் தொலை தூர ஏவுகணை. போர்க்​கப்​பல்​கள் மற்​றும் நீர்​மூழ்கி கப்​பல்​களில் இருந்து இவற்றை ஏவ முடி​யும். 30 முதல் 35 என்ற குறைந்த உயரத்​தில் இது பறக்​கும்​போது, எதிரி நாட்​டின் ரேடார்​களில் சிக்​காது.

5.6 மீட்​டர் நீளம் கொண்ட இந்த ஏவுகணை 1,600 கிலோ எடை உடையது. மணிக்கு 880 கி.மீ வேகத்​தில் சென்​று 1,600 கி.மீ தூரத்​துக்​கும் அப்​பால் உள்ள இலக்கை தாக்​கும் திறன் படைத்​தவை.

எப்-35ஐ ‘அடிர்’

இது இஸ்​ரேல் தொழில்​நுட்​பங்​கள் சில​வற்​றுடன் மேம்​படுத்​தப்​பட்ட போர் விமானம். ரேடாரில்சிக்​காத இந்த விமானங்​கள் மூலம் இஸ்​ரேல் பைலட்​டு​கள் ஈரானுக்​குள் நேற்று முன்​தினம் ஊடுருவி துல்​லிய தாக்​குதலை நடத்​தி​யுள்​ளனர். இவை தவிர எப்​-15து ராம், எப்​-15இ ரக போர் விமானங்​களை​யும் இஸ்​ரேல் பயன்​படுத்தி ஈரானில் குண்​டு​களை வீசி​யுள்​ளது.

டெலிலா, ரேம்பேஜ் ஏவுகணை

இது இஸ்ரேல் ராணுவம் பயன்படுத்தும் தொலை தூர ஏவுகணைகள். இவையும் துல்லிய தாக்குதல் நடத்தும் திறனுடையவை.

ஸ்பைஸ் குண்டு

ஈரான் மீதான தாக்குதலில் ஸ்பைஸ், ஜேடிஏஎம் நிறுவன குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இந்த குண்டுகள் போர் விமானங் களில் எடுத்துச் செல்லப்பட்டு ஈரானில் வீசப்பட்டன.

ஜிபியு-28

ஜிபியு-28 என்ற லேசர் குண்டு 2,268 கிலோ எடையுள்ளது. இது பூமிக்கு அடியில் உள்ள சுரங்கங்களை தகர்க்கும் திறன் வாய்ந்தது.

ஹெராஜ் மற்றும் எய்டன்

இது இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள தொலைதூர ட்ரோன்கள். இவையும் ஈரானில் துல்லிய தாக்குதல் நடத்தின.

ஈரான் பதிலடி

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்கு தலையடுத்து இஸ்ரேல், பஹ்ரைன், குவைத், கத்தார் ஆகிய இடங்களில் உள்ள அமெரிக்க ராணுவம் முகாம்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் ஹாகப், ராட், யா-அலி, கியாம், சோமர், இமாத், கொராம்சார், செஜ்ஜில் ஆகிய ஏவுகணைகளை ஈரான் பயன்படுத்தியது. இவைகள் தொலைதூர, குறுகிய தூர இலக்குகளை தாக்கும் ஏவுகணைகள் ஆகும். ஏவுகணைகள் தவிர ட்ரோன்கள் மூலமும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here