பாகிஸ்தான்: தீவிரவாத தாக்குதல் சம்பவங்களில் 14 வீரர்கள் உட்பட 17 பேர் உயிரிழப்பு

0
19

பாகிஸ்​தானின் கைபர் பக்​துன்க்வா மாகாணத்​தில் நிகழ்ந்த தீவிர​வாத தாக்​குதல் சம்​பவங்​களில் 14 பாது​காப்​புப் படை வீரர்​கள் உட்பட 17 பேர் உயி​ரிழந்​தனர்.

பாகிஸ்​தானின் கைபர் பக்​துன்க்வா மாகாணம், பஜாவுர் மாவட்​டத்​தில், தீவிர​வா​தி​கள் நேற்று முன்​தினம் மாலை வெடிபொருட்​கள் நிரப்​பப்​பட்ட ஒரு வாக​னத்தை ஒரு சோதனைச் சாவடிக்கு அரு​கிலுள்ள ஒரு கல்​லூரி​யின் சுவரில் மோதி தாக்​குதல் நடத்​தினர். இதில் 11 பாது​காப்​புப் படை வீரர்​கள் மற்​றும் ஒரு சிறுமி கொல்​லப்​பட்​ட​தாக ராணுவம் தெரி​வித்​துள்​ளது.

இந்த தாக்​குதல் அரு​கில் இருந்த குடி​யிருப்​பு​களை​யும் கடுமை​யாக சேதப்​படுத்​தி​யது. அத்​துடன் 7 பேர் காயமடைந்​தனர். இது​போல பன்னு நகரில் உள்ள மிரியன் காவல் நிலை​யம் அருகே ரிக்​சா​வில் வைக்​கப்​பட்​டிருந்த வெடிகுண்டு வெடித்​த​தில் பொது​மக்​கள் 2 பேர் உயி​ரிழந்​தனர் மற்​றும் 17 பேர் காயமடைந்​தனர்.

மேலும் ஷாங்லா மாவட்​டத்​தில் தேடு​தல் வேட்​டை​யின்​போது நடந்த மோதலில் 3 போலீ​ஸார் மற்​றும் 3 தீவிர​வா​தி​கள் கொல்​லப்​பட்​டனர். கொல்​லப்​பட்ட தீவிர​வா​தி​கள் சீனர்​களை இலக்​காகக் கொண்டு நடத்​தப்​பட்ட தாக்​குதல்​களில் தொடர்​புடைய​வர்​கள் என்று காவல் துறை தெரி​வித்​துள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here