இலவச திட்டங்களை முறைப்படுத்த கோரி மனு: உச்ச நீதிமன்றத்தில் மார்ச்சில் விசாரணை

0
17

அஸ்​வினி குமார் உபாத்​யாய் தாக்​கல் செய்​துள்ள மனு​வில், “அரசி​யல் கட்​சிகள் அறிவிக்​கும் இலவச திட்​டங்​களை தேர்​தல் முறை​கேடு என அறிவிக்க வேண்​டும். தேர்​தல் அறிக்கைகளில் வெளி​யிடப்​படும் இலவசத் திட்ட அறி​விப்​பு​களை முறைப்​படுத்த வேண்​டும்” என்று கோரி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் தலை​மையி​லான அமர்வு முன்பு மனு​தா​ரர் அஸ்​வினி குமார் உபாத்​யாய் முன்​வைத்த வாதத்​தில் கூறிய​தாவது: தமிழகம் உட்பட 5 மாநிலங்​களுக்கு விரை​வில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்​ளது.

சூரியன், சந்​திரனை தவிர மீத​முள்​ளவை இலவச​மாக வழங்கப்படும் என்று அறி​விப்​பு​கள் வெளி​யிடு​வது முறை​கே​டாகும். மாதம் ரூ.5,000 வழங்​கப்​படும் என்று வாக்​குறுதி தரப்படுகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்​டும். எனது மனுவை விரைந்து விசா​ரிக்க வேண்​டும். இவ்​வாறு மனு​தா​ரர் அஸ்​வினி உபாத்​யாய் வாதிட்​டார்.

இது குறித்து உச்சநீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறும்போது, “இந்த விவகாரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. குறிப்பாக பொதுநலன் சார்ந்தது. இதனை மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்கும். வரும் மார்ச் மாதம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here