மேற்கு வங்க சட்டப்பேரவையில் நிதியமைச்சர் சந்திரிமா பட்டாச்சார்யா ரூ.4 லட்சம் கோடியில் 2026-27 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பெண்களைக் குறிவைத்து, ‘லக்ஷ்மிர் பந்தர்’ திட்டத்தின் கீழ் மகளிருக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை ரூ.500 உயர்த்தப்பட்டுள்ளது.
வேலையில்லாத இளைஞர்களுக்காக யுவ சாத்தி திட்டத்தின் கீழ் 21 முதல் 40 வயதுக்குட்பட்ட வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை மாதம் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படும் என பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.



